முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 
செய்திகள்

இந்திரா காந்தி பிறந்தநாள் - தலைவர்கள் மரியாதை

DIN
இந்திரா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் சோனியா காந்தி.
மலர் தூவி மரியாதை செலுத்தும் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் இந்திரா காந்தி, நவம்பர் 19, 1917 இல், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு - கமலா நேருவுக்கு மகளாகப் பிறந்தார்.
தில்லியில் சக்தி ஸ்தலா எனுமிடத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதுமுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் இந்திரா காந்தியின் பிறந்தநாளை கட்சியினரும் தொண்டர்களும் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர். கேக் வெட்டிக் கொண்டாடும் பெண் தொண்டர்கள்.
இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர் இந்திரா காந்தி.
1966 - 1977 , 1980- 1984 காலகட்டத்தில் பிரதமராக இருந்த அவர் 1984 அக்டோபர் 31 அன்று படுகொலை செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?

2,833 காவலர்கள் பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

தவெக மாநாடு: பணியில் 200 செவிலியர்கள் உள்பட 600 மருத்துவக் குழுவினர்!

பக்தா்கள் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெறுகின்றன: இந்து முன்னணி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

SCROLL FOR NEXT