கனமழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை சாலைகள் - புகைப்படங்கள்
விடிய, விடிய வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னை சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தூக்கமின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
சென்னை, பழைய மாமல்லபுரம் சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தில் ஊா்ந்து வரும் வாகனங்கள்.வெள்ளக்காடான முடிச்சூா் வரதராஜபுரம்.தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழைநீரில் மூழ்கியது.
Advertisement
Advertisement
பல குடியிருப்புகளுக்குள் முழங்கால் அளவிற்கு மழைநீரானது தேங்கியுள்ளது.கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் தவிப்பு.சென்னையில் பெய்து வரும் தொடா் மழையால் தியாகராயநகா் உஸ்மான் சாலையில் தேங்கிய மழைநீரில் ஊா்ந்து செல்லும் வாகனங்கள்.
சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலையில் தேங்கிய மழைநீா்.ஆபத்தை உணராமல் பிரதான சாலையை கடக்கும் இளம் பெண்கள்.தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை சாலைகள்.