உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் உதய் உமேஷ் லலித் - புகைப்படங்கள்
DIN
குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்க 49வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக் கொண்ட உதய் உமேஷ் லலித்.இந்தியாவின் 49-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற உதய் உமேஷ் லலித்.உதய் உமேஷ் லலித் வருகின்ற நவம்பர் 8, 2022 அன்று 65 வயதில் ஓய்வு பெறுவதால் ஓய்வு பெறுவதற்கு முன் 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருப்பார்.தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்ற பிறகு பதிவேட்டில் கையெழுத்திடும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித்.பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் முன்னிலையில் பதவி பிரமாணம் நடைபெற்றது.ஏற்கனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா ஓய்வு பெறுவதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார்.பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோர் பதவி பிரமாணம் விழாவில் கலந்து கொண்டனர்