முகப்பு
செய்திகள்

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53 - புகைப்படங்கள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஏவிய பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட், வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜூன் 2022, 8:54 pm IST
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. - சி 53 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.
பகிர்:
நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய 25 மணி நேர கவுண்டவுன், இன்று (வியாழக்கிழமை) மாலை 6.02 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
டிஎஸ்-இஓ செயற்கை கோள் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம் எடுக்கும் வசதி கொண்டது.

Advertisement

Advertisement

செயற்கைக் கோள்களை சுமந்து விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. - சி 53 ராக்கெட்.
வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராக்கெட் ஏவுதலை பார்வையிட பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments