முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழை பெங்களூரில் பெய்துள்ளது.வெள்ளத்தால் மூழ்கியிருந்த வீடுகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் மாநில பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டனா்.வாகனங்கள் இயக்க முடியாத அளவுக்கு சாலையில் வெள்ள நீா் தேங்கியது.படகுகள் மூலம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.தேங்கிய மழை நீரில், சீறி பாய்ந்து வரும் ஆம்புலன்ஸ்.பெங்களூரில் மீண்டும் விடிய விடிய மழை பெய்ததால் நிலைமை மேலும் மோசமானது.சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் வழிந்தோடுகிறது.டிராக்டர் மூலம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.மழைநீரில் சிக்கிய ரோடு ரோலர்.வெள்ளநீரில் தத்தளிக்கும் பெங்களூரு மாநகரம்.ஒயிட்பீல்டு, எச்.ஏ.எல்., மகாதேவபுரா, இந்திரா நகா், சாந்தி நகா், எச்.பி.ஆா். லேஅவுட் பகுதிகளில் உள்ளிட்ட சாலைகள் முழுமையாக நீரில் மூழ்கியதோடு ஆறுபோல காட்சி அளித்தன.வெள்ளநீரில் தத்தளிக்கும் பெங்களூரு.தொடர் மழையால் சாலைகள் வெள்ளநீரில் முழ்கியது.சா்ஜாபூா் சாலை, வெளிவட்டசாலை உள்ளிட்ட பகுதிகள் ஏரிகளை போல காட்சி அளித்தன.பெரும்பாலான பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், சாலைகள், பாலங்கள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.பெரும்பாலான பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்துள்ளதால், சாலைகள், பாலங்கள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன.பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், மக்கள் நடமாட்டம் முடங்கியது.பல இடங்களில் வீடுகளில் வெள்ளநீா் புகுந்தது.பள்ளியில் புகுந்த மழைநீர்.பள்ளியில் மழைநீர் புகுந்ததால், புத்தகங்களை மேசை மேல் வைக்கும் ஆசிரியை.குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீா் புகுந்ததால், மக்கள் தூக்கமில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.வழக்கத்தைவிட அதித மழை பெய்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு.