முகப்பு
செய்திகள்

வடமாநிலங்களில் நீடிக்கும் கனமழை - புகைப்படங்கள்

பல்வேறு வடமாநிலங்களில் கனமழை நீடிக்கும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
சண்டிகரில் கடந்த 30 மணி நேரமாக பெய்த கனமழையால், நகரின் பல பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் நீரில் மிதக்கும் வாகனங்கள்.
பகிர்:
சண்டிகரில் பெய்த கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்.
பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
மதுராவில், கனமழைக்குப் பிறகு வெள்ளம் சூழ்ந்த தெருவில் காளை வண்டியில் செல்லும் நபர் ஒருவர்.
புதுதில்லியில் உள்ள விஜய் சௌக் பகுதியில் கனமழைக்கு மத்தியிலும் குடையை பிடித்து செல்லும் இளம் பெண்கள்.
மதுராவில் கொட்டி தீர்த்த கனமழைக்குப் பிறகு, வெள்ளம் சூழ்ந்த தெரு வழியாக டிராக்டரில் செல்லும் உள்ளூர் மக்கள்.
பாட்டியாலாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை படகில் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லும் தேசிய பேரிடர் மீட்புப் குழுக்கள்.
பாட்டியாலா மாவட்டத்தில் உள்ளூர் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு படகு மூலம் அழைத்து செல்லும் ராணுவ வீரர்கள்.
சண்டிகரில் மழை நீர் சுழ்ந்த சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
ஜெய்ப்பூரில் மழை நீர் சுழ்ந்த சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
ஜிராக்பூரில் கொட்டித் தீர்த்த கனமழையால் நீரில் மிதக்கும் வாகனங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.