முகப்பு
செய்திகள்

ஜி-20 மாநாடு முகப்பில் நடராஜர் சிலை - புகைப்படங்கள்

ஜி-20 மாநாட்டின் முகப்பு பகுதியில் அஷ்டதாதுக்களால் வடிவமைக்கப்பட்ட 28 அடி உயர உலகின் மிகப்பெரிய பிரம்மாண்ட நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
ஜி-20 மாநாடு நடைபெறும் பாரத மண்டபத்தின் முன்பு சுமார் 18 டன் எடையும் அஷ்டதாதுக்களால் வடிவமைக்கப்பட்ட 28 அடி உயர உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
பகிர்:
சுவாமிமலையில் இருந்து புதுதில்லிக்கு கொண்டு செல்லப்பட்ட 28 அடி உயர பிரம்மாண்ட நடராஜர் சிலை.
மாநாட்டின் முகப்பு பகுதியில் பிரம்மாண்ட நடராஜர் சிலையை அமைக்க மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையம் முடிவு செய்தது.
28 அடி உயரம், 21 அடி அகலம், 18 டன் எடையில் செம்பு, பித்தளை, இரும்பு, ஈயம், தங்கம், வெள்ளி, வெள்ளீயம், பாதரசம் ஆகிய 8உலோகங்களை கொண்ட அஷ்டதாதுக்களால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டது.

Advertisement

ஜி-20 மாநாட்டு முகப்பில் நிர்மாணிக்கப்பட்ட நடராஜர் சிலை.
தில்லி பிரகதி மைதானம் முகப்பில் பிரம்மாண்டமான நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
கம்பீரமாக நிற்கும் நடராஜர் சிலை சுற்றியுள்ள பகுதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments