முகப்பு
செய்திகள்

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் - புகைப்படங்கள்

Updated On : 1 செப்டம்பர், 2024 at 2:07 PM
தெற்கு ஆசியாவில் முதல் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். - R Senthilkumar
பகிர்:
சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நேற்று தீவுத்திடல் பகுதியில் பயிற்சிசுற்றுகளுடன் தொடங்கியது.
தெற்கு ஆசியாவில் முதல் முறையாக நடத்தப்படும் இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயம் இதுவாகும்.
கார்கள் இரு பக்கவாட்டு சக்கரங்கள் மட்டுமே தரையில் இருந்தபடி அதிவேகத்தில் சென்றதை கண்டு ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்.
200 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்ற இந்த ஃபார்முலா 4 கார்களை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.
ஒரு அணிக்கு 2 வீரர்கள் வீதம் 16 பேர் கலந்து கொள்கிறார்கள்.
முதல் சுற்று கடந்த 24 மற்றும் 25-ம் தேதிகளில் சென்னையை அடுத்த இருங்காட்டு கோட்டையில் நடைபெற்றது.
சென்னையில் நடைபெறுவது 2-வது சுற்று போட்டியாகும்.
3-வது சுற்று போட்டி கோவையில் வரும் 13 முதல் 15-ம் தேதி நடைபெறும்.
4-வது மற்றும் 5-வது சுற்றுகள் அக்டோபர், நவம்பரில் கோவா மற்றும் கொல்கத்தாவில் நடத்தப்படும்.
சுமார் 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.