முகப்பு
செய்திகள்

தேசியக் கொடியேற்றினார் ஆளுநா் ஆா்.என். ரவி - புகைப்படங்கள்

Updated On : 26 ஜனவரி, 2025 at 1:37 PM
நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
பகிர்:
சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.
நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பூங்கொத்து கொடுத்து, கைகுலுக்கி வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்.
76 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
சென்னை மெரினா கடற்கரையில் ராணுவம், கடற்படை, விமானப்படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, தமிழ்நாடு காவல்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.