முகப்பு
அரசியல்

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி - புகைப்படங்கள்

Updated On : 6 ஆகஸ்ட், 2021 at 9:55 PM
விவசாயிகளை காப்பாற்று, இந்தியாவை காப்பாற்று என்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:29 PM
ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Advertisement

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜந்தர் மந்தரில் குவிந்தனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
சிங்கு, திக்ரி, காசிப்பூர், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் பல்வேறு மாநில விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும், எந்த தீர்வும் இது வரை எட்டப்படவில்லை.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்ற வளாகத்திலிருந்து ஜந்தர் மந்தர் பகுதி வரை, ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சியினர் பேரணியாக கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.