முகப்பு
விளையாட்டு

தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த நீரஜ் சோப்ரா - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
டோக்யோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி வீசி தங்கப் பதக்கத்தை வென்று புதிய சரித்திரத்தை படைத்தார்.
பகிர்:
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32வது ஒலிம்பிக் திருவிழாவில் தங்கப் பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா.
தடகளத்தில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.
ஒலிம்பிக்கில் இந்தியா புதிய சரித்திரம் படைத்துள்ளது.
6 சுற்றுகளின் முடிவில், நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
பதக்கத்திற்காக 100 ஆண்டுகளாக காத்திருந்த இந்தியாவின் ஏக்கத்தை நீரஜ் சோப்ரா.
தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா படைத்திருக்கிறார்.
இறுதிச் சுற்றில் பிற நாட்டின் வீரர்கள் நீரஜ் சோப்ராவுக்கு கடுமையான சவால் அளித்தனர்.
நீரஜ் சோப்ரா முதல் சுற்றில் 87.03 மீட்டரும், இரண்டாம் சுற்றில் 87.58 மீட்டரும், மூன்றாம் சுற்றில் 76.79 மீட்டரும் ஈட்டி வீசினார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளதன் மூலம் இந்தியா பதக்கப் பட்டியலில் முன்னேறியிருக்கிறது.
நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் பதக்கப்பட்டியலில் 66வது இடத்தில் இருந்த இந்தியா 48வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
2017ல் புவனேஸ்வரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றவர் நீரஜ் சோப்ரா.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் நீரஜ் சோப்ரா 23 வயதானவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.