14.1.1976: பீகாரில் குளிருக்கு 108 பேர் பலி
பீகாரில் குளிருக்கு 108 பேர் பலியானது பற்றி...
பாட்னா, ஜன. 13 - பீகாரில் ஒரு மாத காலத்தில் கடுங்குளிருக்குப் பலியானோரின் எண்ணிக்கை 108 ஆகியது.
மோகாமேபரெளனி தொழிற்சாலைப் பகுதியில் 19 பேர் இறந்ததையடுத்து எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்தது.
ஐ.நா. தலைமையக கட்டிடம் அருகே வெடி குண்டுகள்
நியூயார்க், ஜன. 12 - ஐக்கிய நாடுகள் சங்கத் தலைமையகக் கட்டிடம் அருகே 3 வெடிகுண்டுகளை, பாதுகாப்பு ஊழியர்கள் இன்று கண்டுபிடித்தனர்.
Advertisement
Advertisement
ஐக்கிய நாடுகள் சங்க பந்தோபஸ்து சபை கூட்டம் துவங்குவதற்கு 1 மணி நேரம் முன்பாக, இந்தக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஐக்கிய நாடுகள் சங்க வாயிலில் உள்ள பாதையும், நியூயார்க் நகர சுரங்கப்பாதைகளும் சந்திக்கும் இடத்தில், இந்த குண்டுகள் இருந்ததை, பாதுகாப்பு ஊழியர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் இந்தக் குண்டுகளை அழித்தனர்.
இந்தக் குண்டுகள் வெடித்தால் சேதம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், ஐ.நா. நூலகக் கட்டிடத்திலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
14.1.1976: 108 people died due to the cold in Bihar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.