முகப்பு
செய்திகள்

டிப்ஸ்..டிப்ஸ்...

Updated On : 2 மார்ச், 2017 at 3:56 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:37 PM

கொசு கடித்து அரிக்கிறதா? அந்த இடத்தில் உப்பை தண்ணீரில் கரைத்து தடவினால் அரிப்பு நீங்கும்.
- பி. கவிதா

எலுமிச்சம் பழச்சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்த கலவை கொண்டு வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் அகலும்.
- லட்சுமி மணிவண்ணன்

ஆமணக்கு இலையை விளக்கெண்ணெய்யில் வதக்கி கட்டிகளின் மீது வைத்து துணியால் கட்டினால் கட்டிகள் பழுத்து உடையும்.

Advertisement

பாதத்தில் பித்த வெடிப்பு வராமல் தடுக்க அரச மரத்தின் பால் எடுத்துத் தடவி வர பித்தம் மாயமாகிவிடும். 

வாழைப்பூவை நன்கு மையாக அரைத்து அப்படியே உதடு வெடிப்பு, ஆசனவாய் வெடிப்பு வெளிப்புறமாக தடவி வர குணமாகும்.
 - கே.பிரபாவதி

பூக்குவளையில் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போட்டுவிட்டால் பூக்கள் நீண்ட நேரம் புதிதாக வாடாமல் இருக்கும்.

கண்ணாடிப் பொருள்களைச் சோப்புப் போட்டுக் கழுவிவிட்டு நீலம் கலந்த நீரில் அலசினால் மிகவும் பளபளவென்று இருக்கும்.

வீட்டில் தயாரிக்கும் தேநீரில் சில துளிகள் வெனிலா எஸன்ஸை சேர்த்துக் கொண்டால் தேநீர் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
- நெ.இராமன்

வயது அதிகரிக்கும்போது ஞாபகசக்தி குறையும். இதற்கு பார்லி அரிசியும், அவித்த உருளைக் கிழங்கும் சாப்பிட்டால் போதும். இவற்றில் உள்ள மாவுச் சத்து ஞாபக சக்தியை வளர்க்கும் என்று 2001- ஆம் ஆண்டு டொரன்டோ பல்கலைக்கழகம் கண்டு பிடித்தது. எனவே, வாரம் மூன்று வேளையாவது தவறாமல் இதனை சேர்த்துக் கொள்ளுங்கள்.
(இளமை காக்கும் உணவு முறைகள் என்னும் நூலிலிருந்து)
 - முக்கிமலை நஞ்சன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.