செய்திகள்

பல் மற்றும் ஈறுகள் கூச்சமாக உள்ளதா?

கோவை பாலா

அறிகுறிகள் : உடலில் எண்ணெய்ப்பசை குறைவதால் ஈரப்பதம் குறையும். அது போல் சளி ஜவ்வு படலம் இருந்தால் தான் உடலில் சுமுகமான முறையில் பொருட்களின் பரிமாற்றம் நடைபெறும.இதனால் மூக்கில் உள்ள சளி காய்ந்த உலர்ந்த நிலை ஏற்படும். வாய் வறட்சியாக இருக்கும்.அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பார்கள். நாக்கில் கொப்பளங்கள் மற்றும் பல் கூச்சம் குறைபாட்டிலிருந்து முற்றிலும் விடுபட..

மண்டலம்- நாளமுள்ளச் சுரப்பி மண்டலம்
காய்- வெண்டைக்காய்
பஞ்சபூதம் - காற்று
மாதம் - மாசி
குணம் - திருப்தி
ராசி /லக்கினம் -  கும்பம்

சத்துக்கள் : வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ளது. மேலும் சவ்வு போன்ற நார்ச்சத்தும் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. 

தீர்வு : வெண்டைக்காய் (5) எடுத்து 10 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பின்பு நறுக்கி அதனுடன் ஒரு எலுமிச்சம் பழத்தை தோலுடன் நறுக்கி அரைத்து சாறு எடுத்து அதனுடன் சேர்த்து மிளகுத் தூள் (1 ஸ்பூன்), சீரகத்தூள் (1 ஸ்பூன்), சிறிதளவு இந்துப்பு சேர்த்து கலக்கி 10 நிமிடம் ஊற வைத்து பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிட்டு வரவும். மதியம் வேளை உணவில் வெண்டைக்காயை  நீராவியில் வேக வைத்து பொறியல் செய்து சாப்பிட்டு வரவும்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT