செய்திகள்

சாப்பிட்ட பின்பு வயிறு பாரமாக உள்ளதா? 

கோவைக்காய் (3), முருங்கை விதை (2), பீர்க்கங்காய் (50 கிராம் தோலுடன்) இவை மூன்றையும்

கோவை பாலா

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை

காயமே (உடலே) மருத்துவர் !! காய்கறிகளே மருந்து !!!

உணவை மருந்தாக்கு !! மருந்தை உணவாக்காதே !!!

சத்துக்கள் : வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

தீர்வு : கோவைக்காய் (3), முருங்கை விதை (2), பீர்க்கங்காய் (50 கிராம் தோலுடன்) இவை மூன்றையும் மிக்ஸியில் போட்டு மோர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி காலை மதியம் மாலை என உணவிற்கு பின்பு அரை மணி நேரம் கழித்து மூன்று வேளையும் குடிக்கலாம். கோவைக் காயையும், நீராவியில் வேக வைத்து பொறியலாக செய்து அவற்றில் தேங்காயை அதிகமாகப் போட்டு உணவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். பின்பு பசித்தால் உணவு எடுத்துக்கொள்ளுங்கள்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

நவி மும்பையில் நடனப் பாரை தாக்கி சேதப்படுத்திய நவநிர்மாண் சேனை தொண்டர்கள் !

SCROLL FOR NEXT