தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கிறதா?
தலையில் பேன்கள் அதிகமாக இருந்தால் முடியின் அடர்த்திக்கு ஏற்ப, வசம்பை பொடியாக்கி
தலையில் பேன்கள் அதிகமாக இருந்தால் முடியின் அடர்த்திக்கு ஏற்ப, வசம்பை பொடியாக்கி அத்துடன் வேப்பிலையை ஊற வைத்து அரைத்து தலைமுடியில் பூசி அரைமணி கழித்து நல்ல தண்ணீரால் தலைமுடியை அலசினால் பேன் தொல்லை இருக்காது.
**
நெஞ்சில் கபம் கட்டிக் கொண்டு அவதிபடும் அனைவருக்கும் ஓரு எளிய தீர்வாக, சிறிது கட்டி கற்பூரத்தை தேங்காய் எண்ணையுடன் கலந்து இரும்பு கரண்டியில் விட்டு அடுப்பிலோ /விளக்கிலோ காட்டி சூடு படுத்தி கொண்டு, கை பொறுக்கும் சூட்டில் விரல்களால் நெஞ்சில் தடவ, கபம் இளகும். மூச்சு சுவாசம் சீராகும்.
Advertisement
Advertisement
**
விருந்து முடிச்சாச்சு. வயிறு கனமாக இருந்தால்? இரண்டு கோப்பை தண்ணீர் எடுத்து அதனுடன் ஓரு டீஸ்பூன் சீரகமும், சோம்பும் போட்டு நன்கு கொதித்ததும்,தண்ணீர் 1 கோப்பை யாக,வற்றியதும் குடிக்கவே, வயிற்றின் பாரம் குறைந்து நன்கு பசி எடுக்கும்.
**
தண்ணீர் தாகம் அதிகமாக இருந்தால் மோரில் நீர் விட்டு, உப்பு சிட்டிகை கலந்து குடித்தால் தாகம் தணிந்து நாவறட்சி குறையும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.