செய்திகள்

தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கிறதா?

தலையில் பேன்கள் அதிகமாக இருந்தால் முடியின் அடர்த்திக்கு ஏற்ப, வசம்பை பொடியாக்கி

G.லதா

தலையில் பேன்கள் அதிகமாக இருந்தால் முடியின் அடர்த்திக்கு ஏற்ப, வசம்பை பொடியாக்கி அத்துடன் வேப்பிலையை ஊற வைத்து அரைத்து தலைமுடியில் பூசி அரைமணி கழித்து நல்ல தண்ணீரால் தலைமுடியை அலசினால் பேன் தொல்லை இருக்காது.

**

நெஞ்சில் கபம் கட்டிக் கொண்டு அவதிபடும் அனைவருக்கும் ஓரு எளிய தீர்வாக, சிறிது கட்டி கற்பூரத்தை தேங்காய் எண்ணையுடன் கலந்து இரும்பு கரண்டியில் விட்டு அடுப்பிலோ /விளக்கிலோ காட்டி சூடு படுத்தி கொண்டு, கை பொறுக்கும் சூட்டில் விரல்களால் நெஞ்சில் தடவ, கபம் இளகும். மூச்சு சுவாசம் சீராகும்.

**

விருந்து முடிச்சாச்சு. வயிறு கனமாக இருந்தால்? இரண்டு கோப்பை தண்ணீர் எடுத்து அதனுடன் ஓரு டீஸ்பூன் சீரகமும், சோம்பும் போட்டு நன்கு கொதித்ததும்,தண்ணீர் 1 கோப்பை யாக,வற்றியதும் குடிக்கவே, வயிற்றின் பாரம் குறைந்து நன்கு பசி எடுக்கும்.

**

தண்ணீர் தாகம் அதிகமாக இருந்தால் மோரில் நீர் விட்டு, உப்பு சிட்டிகை கலந்து குடித்தால் தாகம் தணிந்து நாவறட்சி குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஸ்மிருதி மந்தனா!

சட்டவிரோத வாக்காளர் அட்டை விநியோகம்: காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப் பதிவு!

நீக்கப்பட்டவர்களின் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட உத்தரவு!

2032-க்குள், ரூ. 75,000 கோடி முதலீடு இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு இயற்பியலுக்கான நோபல்!

SCROLL FOR NEXT