செய்திகள்

சூடான உணவு சாப்பிட்டவுடன் மலம் போகத் தோன்றும் குறைபாட்டை நீக்கும் மருந்து

முதலில் திராட்சை பழத்துடன் வெந்தயத் தூளை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி

கோவை பாலா

திராட்சை ஜூஸ்

தேவையான பொருட்கள்

திராட்சை பழம் - 150 கிராம்
வெந்தயத் தூள் - 5 கிராம்
எலுமிசம்பழச் சாறு - 2 தேக்கரண்டி
தேன் -  ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - 250 மி.லி

செய்முறை : முதலில் திராட்சை பழத்துடன் வெந்தயத் தூளை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாறு, தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலக்கி குடிக்கவும்.

பயன்கள் : இந்தப் பழரசத்தை குடிப்பதன் மூலம் சூடான உணவு சாப்பிட்டால் உடனே மலம்போகத் தோன்றும் குறைபாடு நீங்கும். உடல் உஷ்ணம், பித்த தாகம் மறையும் , வறட்டு இருமல், உஷ்ண இருமல், தொண்டையில் உண்டாகும் கோழைக்கட்டு நீங்கும். ரத்தத்தையும் சுத்தப்படுத்தும் அற்புதமான மருந்து இந்த திராட்சைப் பழ ஜூஸ். 

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

SCROLL FOR NEXT