செய்திகள்

சூடான உணவு சாப்பிட்டவுடன் மலம் போகத் தோன்றும் குறைபாட்டை நீக்கும் மருந்து

முதலில் திராட்சை பழத்துடன் வெந்தயத் தூளை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி

கோவை பாலா

திராட்சை ஜூஸ்

தேவையான பொருட்கள்

திராட்சை பழம் - 150 கிராம்
வெந்தயத் தூள் - 5 கிராம்
எலுமிசம்பழச் சாறு - 2 தேக்கரண்டி
தேன் -  ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - 250 மி.லி

செய்முறை : முதலில் திராட்சை பழத்துடன் வெந்தயத் தூளை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாறு, தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலக்கி குடிக்கவும்.

பயன்கள் : இந்தப் பழரசத்தை குடிப்பதன் மூலம் சூடான உணவு சாப்பிட்டால் உடனே மலம்போகத் தோன்றும் குறைபாடு நீங்கும். உடல் உஷ்ணம், பித்த தாகம் மறையும் , வறட்டு இருமல், உஷ்ண இருமல், தொண்டையில் உண்டாகும் கோழைக்கட்டு நீங்கும். ரத்தத்தையும் சுத்தப்படுத்தும் அற்புதமான மருந்து இந்த திராட்சைப் பழ ஜூஸ். 

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராட்சத ராட்டினங்கள் இயக்கக் கட்டுப்பாடுகள்

ராணுவ வீரரின் மனைவி தற்கொலை

சமகால தலைமுறையினருக்கு இலக்கியங்களின் தேவை அவசியமானது

குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

ஒரு மாதமாக குடிநீா் கிடைக்காத பூக்குழி கிராமம்: ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு புகாா்

SCROLL FOR NEXT