இன்றைய மருத்துவ சிந்தனை 22.11.2016சீரகம்
சீரகத்தை கரும்புச்சாற்றில் ஊறவைத்து , காயவைத்து பொடி செய்து தினமும் அதிகாலையில்
சீரகத்தை கரும்புச்சாற்றில் ஊறவைத்து , காயவைத்து பொடி செய்து தினமும் அதிகாலையில் அரை ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் , பித்தம் குறையும் , இளநரை மறையும்.
சீரகம் , சோம்பு , வாய்விளங்கம் , ரோஜாப்பூ - அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்துகொள்ளவும் , இதில் காலை மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் , உடல் பருமன் குறையும்.
சீரகம் , ஒமம் - இரண்டையும் சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்கவைத்துக் குளித்தால் இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.
சீரகம் , குருந்தொட்டி வேர் - இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடிசெய்து , கஷாயம் காய்ச்சி மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து குடித்தால் குளிர்க் காய்ச்சல் உடனே குணமாகும்.
சீரகத்தைப் பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட்டால் , உடல் சூட்டால் உண்டாகும் வயிற்று வலி குணமாகும்
- கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com