உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை நொச்சி

தினமணி

வெள்ளை நொச்சி இலையைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு நீராவி பிடித்தால் வியர்வை (கெட்ட நீர்) அதிகம் வெளியேறி காய்ச்சல் குணமாகும்.

நொச்சி இலையை உப்பு சேர்த்து வதக்கி இளஞ்சூட்டுடன் நெற்றியில் வைத்துக் கட்டினால் தலை வலி, தலைபாரம் குறையும்.

நொச்சி இலையை நன்றாக அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ஈரல் வீக்கம் குணமாகும்.

நொச்சி இலை (ஒரு கைப்பிடி), துளசி (ஒரு கைப்பிடி) இரண்டையும் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து நீராவி பிடித்தால் தலை வலி , உடல் வலி, ஜலதோஷம் போன்றவை குணமாகும்.

நொச்சி இலைச் சாற்றில் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சிக் தலைக்குக் குளித்து வந்தால் தலை வலி, கழுத்து வலி, பிடரி வலி போன்றவை குணமாகும்.

நொச்சி இலைச் சாறு (ஒரு லிட்டர்) எடுத்து நன்றாகக் கொதிக்க வைத்து, நான்கில் ஒரு பங்காக சுண்டக் காய்ச்சி தினமும் 60 மில்லி அளவுக்குக் குடிப்பதுடன் , வலி உள்ள இடத்தில் தேய்த்தால் அனைத்து விதமான மூட்டு வலிகளும்
விரைவில் தீரும்.

நொச்சியிலை 1 கைப்பிடியளவு, மூக்கிரட்டை வேர், காக்கரட்டானி வேர் வகைக்கு 1/2 கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் சுக்கு 1, மிளகும், சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து 1/2 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு தினமும் 2 வேளையாக, 1 வாரம் குடித்துவர தொடக்க நிலையில் உள்ள இளம் பிள்ளை வாதம் (போலியோ) குணமாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT