உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- தும்பைப் பூவையும், ஒருமிளகையும் அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டுவந்தால் தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும்.
- தும்பைப் பூவையும், ஊமத்தம் பூவையும் சம அளவு எடுத்து அரைத்துப் புங்கை நெய்யில் கலந்து காய்ச்சி வடித்துக் கொண்டு காதிற்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தி வந்தால் காதில் உள்ள புண், காதில் சீழ் வடிதல், காது இரைச்சல் போன்றவை தீரும்.
- தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் சம அளவு எடுத்து அரைத்துக் கடுகெண்ணெய்யில் கலந்து காய்ச்சி வடித்து வைத்ததுக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வந்தால் காதில் சீழ்வடிதல் குணமாகும்.
- அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து உள்ளுக்குத் கொடுத்து வந்தால் நாட்பட்ட விக்கல் நீங்கும்.
- தும்பைச் சாறு 500 மி.லி. தேங்காய்எண்ணெய் 500 மி.லி.இரண்டையும் கலந்து காய்ச்சி வைத்துக்கொண்டு உடலின் வெளிப் புறத்தில் தேய்த்து வந்தால் வெட்டுக் காயம், ஆறாத புண்கள் ஆறும்.
- தும்பைச் சாறு 30 மி.லி, துத்தி இலைச் சாறு 30 மி.லி இவை இரண்டையும் பசும் பாலில் கலந்து கொடுத்து வந்தால் உள் மூலம், வெளி மூலம், இரத்த மூலம் போன்றவை குணமாகும்.
வகைகள்: தும்பை, பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, பேய்தும்பை, கழுதைத்தும்பை, கசப்புத்தும்பை, கவிழ்தும்பை, மற்றும் மஞ்சள்தும்பை.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com