உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: தும்பை

தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கு

தினமணி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


தும்பை:

  • தும்பைப் பூவையும், ஒருமிளகையும் அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டுவந்தால்  தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும்.
  • தும்பைப் பூவையும், ஊமத்தம் பூவையும் சம அளவு எடுத்து அரைத்துப் புங்கை நெய்யில் கலந்து காய்ச்சி வடித்துக்  கொண்டு காதிற்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தி வந்தால் காதில் உள்ள புண், காதில் சீழ் வடிதல், காது இரைச்சல் போன்றவை தீரும்.
  • தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் சம அளவு எடுத்து அரைத்துக் கடுகெண்ணெய்யில் கலந்து காய்ச்சி வடித்து வைத்ததுக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு  வந்தால் காதில் சீழ்வடிதல் குணமாகும்.
  • அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து உள்ளுக்குத் கொடுத்து வந்தால் நாட்பட்ட விக்கல் நீங்கும்.
  • தும்பைச் சாறு 500 மி.லி. தேங்காய்எண்ணெய் 500 மி.லி.இரண்டையும் கலந்து காய்ச்சி வைத்துக்கொண்டு உடலின் வெளிப் புறத்தில்  தேய்த்து வந்தால் வெட்டுக் காயம், ஆறாத  புண்கள் ஆறும்.
  • தும்பைச் சாறு 30 மி.லி, துத்தி இலைச் சாறு 30 மி.லி இவை இரண்டையும் பசும் பாலில் கலந்து கொடுத்து வந்தால் உள் மூலம், வெளி மூலம், இரத்த மூலம் போன்றவை குணமாகும்.


வகைகள்: தும்பை, பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, பேய்தும்பை, கழுதைத்தும்பை, கசப்புத்தும்பை, கவிழ்தும்பை, மற்றும் மஞ்சள்தும்பை.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT