உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- வயிற்றுப் புழுக்கள் வெளியேற யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவந்தால் வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.
- யானைத்திப்பிலியை பொன்னிறமாக வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ளவும். இதனை ஒரு கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவந்தால் புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் மற்றும் வயிற்றுப்புழுக்கள் ஆகியவை மலத்துடன் வெளியேறும்.
- வயிற்று வலி , வயிற்றுப் பொருமல் ,தொண்டை கமறல் குணமாக திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு ஆகியவற்றை சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் அளவுக்கு தேனுடன் கலந்து மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.
- வெள்ளைப் படுதல் , பெரும்பாடு நீங்க திப்பிலி (10 கிராம்) , தேற்றான் விதை
- (5 கிராம்) சேர்த்துப் பொடியாக்கி கழுநீரில்(அரிசி கழுவிய நீர்) 5 கிராம் எடை அளவைப் போட்டு 7 நாள் காலையில் குடித்துவந்தால் வெள்ளைப் படுதல் , பெரும்பாடு போன்றவை நீங்கும்.
- இளைப்பு நோய் நீங்க திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டுவந்தால் இளைப்பு நோய் குணமாகும்.
- தேமல் குணமாக திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து 2 வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வந்தால் தேமல் குணமாகும்.
-
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com