உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை அம்மான் பச்சரிசிக் கீரை

தினமணி

அம்மான் பச்சரிசி, கீழாநெல்லி, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து 6 மாதங்களுக்குத் தினமும் காலை மாலை என இருவேளையும் 10 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வெண் குஷ்டம் குணமாகும்.

அம்மான் பச்சரிசிக் கீரை, வெள்ளருக்கு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.

அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மிளகு (3), வேப்பிலை (5), இரண்டையும் சேர்த்து அரைத்து அதிகாலையில் 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

அம்மான் பச்சரிசிக் கீரையுடன் சிறிது மஞ்சள், ஒமம்  சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகும்.

அம்மான் பச்சரிசிக் கீரையுடன் கீழாநெல்லி இலையையும் சம அளவு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலக்கி காலை மாலை என இருவேளையும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ,தூக்கத்தில் கனவு நிலையில் விந்து வெளியேறுதல் குறைபாடு சரியாகும்.

பிரசவித்த பெண்கள் சிலருக்குத் தாய்பால் சுரப்பு குறைவாக இருக்கும்.அப்படிப்பட்டவர்கள் அம்மான் பச்சரிசிக் கீரையின் பூக்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து பசும் பாலில் கலந்து 18 நாட்களுக்கு காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் தாய்பால் அதிகமாகச் சுரக்கும்.

KOVAI  HERBAL CARE

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

Cell  :  96557 58609

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

SCROLL FOR NEXT