கானாம் வாழைக் கீரை (உலர்த்தியது-100 கிராம்) மற்றும் தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் அனைத்தும் தலா 100 கிராம் எடுத்துப்பொடியாக்கிதினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். விந்து முந்துதல் பிரச்சனை தீரும்.
கானாம் வாழை கீரைச் சாறெடுத்து அதனுடன் ஜாதிக்காயை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி,தினமும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால், ஆண்மைக் குறைவும் நரம்புத் தளர்ச்சியும் குணமாகும்.
கானாம்வாழைக் கீரைச் சாறு எடுத்து அதனுடன் கசகசாவை ஊற வைத்து அரைத்து,தேனில் குழைத்துச் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் காம உணர்வு அதிகரிக்கும்.
கானாம் வாழைக் கீரையுடன் துத்தி இலையையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.
கானாம்வாழைக் கீரையை அரைத்து, பெண்களின் மார்பில் ஏற்படும் புண்கள் மீது பற்றுப் போட்டால் அவை உடனே ஆறிவிடும்.
கானாம் வாழைக் கீரையை மட்டும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் தீரும்.
கானாம் வாழைக் கீரையுடன் சிறிது மிளகு(10) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குளிர் ஜுரம் உடனே குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609