முகப்பு
உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை (6.01.2017) முளைக்கீரை

முளைக் கீரைச் சாற்றில் முந்திரிப் பருப்பூ ,மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:41 AM
பகிர்:

முளைக் கீரைச் சாற்றில் முந்திரிப் பருப்பூ, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு, தேமல் போன்றவை குறைந்து முகம் பொலிவு பெறும்.

முளைக் கீரைச் சாற்றில் உளுந்தை ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்.

முளைக் கீரையுடன் சிறு பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் குணமாகும்.

முளைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்திப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் பித்த நோய்கள் ,மயக்கம் ,ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.

முளைக் கீரையைச் சமைத்து குழந்தைகளுக்கு தொடர்ந்து 40 நாட்களுக்கு கொடுத்து வந்தால் நல்ல உயரமாக வளருவார்கள்.

முளைக் கீரை , துத்திக் கீரை இரண்டையும் சம அளவு எடுதாது சிறு பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உள் மூலம் , பௌத்திரக் கட்டி, ரத்த மூலம் சரியாகும்.

முளைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக்  கொதிக்கவைத்து  அவற்றைச் சாப்பிட்டு வந்தால் பசியின்மை நீங்கி, நன்றாகப் பசி எடுக்கும்.

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

Cell  :  96557 58609

முழு கட்டுரையைப் படிக்க →