உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை பரட்டைக் கீரை

தினமணி

பரட்டைக் கீரைச் சாறு எடுத்து அவற்றில் சுக்கை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தேனில் ஒரு கிராம் அளவு குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குணமாகும்.

பரட்டைக் கீரையுடன் பூண்டு, மிளகு, ஒமம் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள், பெருவயிறு குணமாகும்.

பரட்டைக் கீரை, வாதநாராயணன் கீரை, முடக்கத்தான் கீரை இவை மூன்றையும் சம அளவு எடுத்து சாறு பிழிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி தைலமாக்கித் தேய்த்துவந்தால் கை, கால், இடுப்பு, மூட்டு வலிகள் குணமாகும்.

பரட்டைக் கீரை, தூதுவளை, முசுமுசுக்கை இவை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலை, மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குணமாகும்.

பரட்டைக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி , இரவில் அரை ஸ்பூன் எடுத்து சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

பரட்டைக் கீரைச் சாறு எடுத்து அவற்றில் தேங்காய் எண்ணெய் கலந்து தைலமாகக் காய்ச்சி பயன்படுத்தி வந்தால் படை, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

குறிப்பு :
பரட்டைக் கீரை குளுமையான தட்பவெப்பத்தில் பயிராகிறது. அதிக குளிர் அல்லது சூடான பருவங்களில் பயிராகுவதில்லை.

KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT