வெந்தயக் கீரையை அரைத்து நல்லெண்ணெய்யில் கலந்து காய்ச்சி தைல பதத்தில் இறக்கி, தலையில் தேய்த்து வந்தால் பேன், பொடுகுத் தொல்லை தீரும். முடியும் கருகருவென்று நன்கு செழித்து வளரும்.
வெந்தயக் கீரையுடன், உலர்ந்த திராட்சை (10), சீரகம் (2 ஸ்பூன்) ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் இருமல் குணமாகும்.
வெந்தயக் கீரையை அரைத்துப் பற்றுப் போட்டால் வீக்கம் மற்றும் தீக்காயங்கள் குணமாகும்.
வெந்தயக் கீரையுடன் உளுந்தை (சிறிதளவு) தட்டிப் போட்டு கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் குடல்புண் குணமாகும்.
வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.
வெந்தயக் கீரையுடன் வாழைப்பூ, மிளகு இரண்டையும் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் ரத்தம் தூய்மையாகும்.
வெந்தயக் கீரையுடன் சீரகம் (சிறிதளவு) சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.
வெந்தயக் கீரையுடன் குடை மிளகாய், கசகசா, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் காம உணர்வு அதிகரிக்கும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.