உடலில் தசைப்பகுதிகளில் உண்டாகும் வலி போன்றவற்றிற்கு ஆடாதொடா இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து குடித்து வந்தால் தசைபிடிப்பினால் உண்டாகும் வலி குணமாகும்.
ஆடாதொடா இலையை அரைத்துச் சாறு எடுத்து, அதில் தேன் கலந்து குடித்து வந்தால் இருமல் மற்றும் சளியுடன் ரத்தம் வெளியேறுவது நிற்கும்.
ஆடாதொடா இலையைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டிய பிறகு தினமும் 50 மில்லி அளவு குடித்து வந்தால் காசநோய் குணமாகும்.
ஆடாதொடா வேரை கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் அனைத்துவிதமான உடல் வலிகளும் குணமாகும்.
ஆடாதொடா வேர், கண்டங்கத்தரி வேர், சுக்கு, கொள்ளு ஆகியவற்றைப் பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் குணமாகும்.
ஆடாதொடா இலையில் வாசிசின் என்னும் வேதிப்பொருள் நுரையீரல் செல்களில் புகுந்து வேலை செய்து விரிவடைய செய்வதால் ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை இது குணப்படுத்துகிறது.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609