நாயுருவி இலையை உலர்த்திப் பொடி செய்து , தினமும் இருவேளை இரண்டு கிராம் அளவுக்குப் பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்த்தொற்று, இதய வால்வுகளில் கொழுப்பு படிதல், இதயச் செயல்திறன் குறைவு போன்ற பாதிப்புகள் தீரும்.
நாயுருவி விதையை (10 கிராம்) பொடி செய்து, துத்திக் கீரையோடு சேர்த்துக் கொதிக்கவைத்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.
நாயுருவி இலையை அரைத்துச் சாறு எடுத்து, உடலில் பூசிக்கொண்டால் தேமல், படை போன்றவை குணமாகும்.
நாயுருவி இலையுடன் ஜாதிக்காயைச் சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடங்களில் தடவிவந்தால் தேமல் மறையும்.
நாயுருவி செடியின் விதைகளைக் காயவைத்து இடித்துப் பொடி செய்து சலித்துக்கொள்ளவும். இதை தினமும் இரண்டு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.
நாயுருவிச் செடியைப் பறித்து தண்ணீரில் போட்டுக் காய்ச்சி இறக்கி பாட்டிலில் ஊற்றிவைத்து ,தினமும் காலையில் மட்டும் குடித்துவந்தால் வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
நாயுருவிச் செடியின் இலைகளை இடித்துச் சாறு எடுத்து காதில் இரண்டு துளிகள் விட்டால், காதில் சீழ் வடிவது நிற்கும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com