உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை நெருஞ்சில்

தினமணி

நெருஞ்சில், வால் மிளகு, சிறுநாகப் பூ இவை மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து தினமும் காலை மாலை என இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் அனைத்தும் தீரும்.

நெருஞ்சில், தனியா இவை இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் சிறநீரகக் கற்கள் கரையும்.

நெருஞ்சில் காய் , நெருஞ்சில் வேர் இவை இரண்டையும் பச்சரிசியோடு சேர்த்து வேகவைத்து கஞ்சியை வடித்து அதில் கொஞ்சம் சர்க்கரையை சேர்த்துக் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் மற்றும் நீர்க்கடுப்பு போன்றவை குணமாகும்.

யானை நெருஞ்சில் விதையை (25 கிராம்) நன்றாக அரைத்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வந்தால் சிறுநீரகக் கல் கரையும்.

நெருஞ்சிக் காயைப் பொடிசெய்து, தண்ணீரில் கலந்து காய்ச்சிக் குடித்து வந்தால் நீர் எரிச்சல் ,சிறுநீர் குறைவு, நீர் அடைப்பு , சதை அடைப்பு போன்ற குறைபாடுகள் தீரும்.

நெருஞ்சில் வேரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து குடித்து வந்தால், பூப்படையாத பெண்கள் பூப்பெய்துவார்கள். 50 கிராம் நெருஞ்சில் இலையில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து, அதைப் பாதியாக காய்ச்சி, தினமும் சிறிதளவு குடித்து வந்தால் பெண்களுக்கான கர்ப்பப்பைக் கோளாறுகள் சரியாவதுடன், குழந்தைப்பேறு உண்டாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT