உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- குங்குமப் பூவை (50 கிராம்) எடுத்து, அதை அரை லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி,அதில் 30மிலி அளவு நீரை காலை, மாலை என இருவேளை அருந்தி வந்தால் தலைவலி, மூக்கில் நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.
- குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வந்தால் ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும்.
- குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வந்தால் முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் மறைந்து முகம் கவர்ச்சி உண்டாகும் .
- குங்குமப் பூ (சிறிதளவு) இவற்றுடன் வெற்றிலை (3) இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது காய்ச்சிய பாலில் அதை போட்டு அருந்தி வந்தாலோ, கர்ப்பினிகளுக்கு பிறக்கும் குழந்தையானது அழகாகவும், பிரசவ வலி இன்றியும் பிறக்கும்.
- குங்குமப் பூ (சிறிதளவு) , துளசி இலை (சிறிதளவு) இவை இரண்டையும் சேர்த்து அரைத்து அம்மை நோய் கண்டவர்கள் சாப்பிட்டு வந்தால் அம்மை நோய் குணமாகும்.
- குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.பின்பு குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வந்தால் உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
குறிப்பு :
குங்குமப் பூவில் போலிகளும் விற்கப்படுகின்றன. நல்ல குங்குமப் பூவினை கண்டறிய ஓரிரு துண்டுகளை சிறிதளவு தண்ணீரில் போட்டால் உடனே தண்ணீர் சிவப்பு நிறமானால் அது போலி. 10 முதல் 15 நிமிடங்களில் நிறம் மாறி நல்ல மணமும் வந்தால் அதுவே அசல் குங்குமப் பூ.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com