முகப்பு
உணவே மருந்து

நமநம என்று காதுகளில் உண்டாகும் அரிப்பு நீங்க ஒரு எளிய மருத்துவம்!

நம் உடலில் அரிப்பு உண்டானால் கிருமிகளின் தாக்கம் உள்ளது என்று பொருள்.

Updated On : 9 ஆகஸ்ட், 2018 at 12:30 PM
பகிர்:

அறிகுறிகள் : நம் உடலில் அரிப்பு உண்டானால் கிருமிகளின் தாக்கம் உள்ளது என்று பொருள். கிருமிகள் இல்லாமல் ஒருவருக்கு உடம்பில் அரிப்பு வராது.உடலில் சேரும் நுண்ணுயிர்கள் மூலமாகத் தான் உடலில் ஏற்படும்.அந்த நுண்ணுயிர்கள் காதில் காணப்பட்டால் உண்டாகும்  அரிப்பு நிரந்தரமாக குணமாக..

மண்டலம் - சுவாச மண்டலம்
காய் - முருங்கை
பஞ்சபூதம் - காற்று
மாதம் - ஐப்பசி
குணம் - பணிவு
ராசி /லக்கினம் - துலாம்

சத்துக்கள் : நார்ச் சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.

Advertisement

தீர்வு : முற்றின முருங்கை விதை(4), கோவக்காய் (5) இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு அதனுடன் புதினா, வெற்றிலை (1) சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி  காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.

தினந்தோறும் ஒரு வேளை உணவில் முருங்கைக் கீரையை  ஒன்றிரண்டாக ஆய்ந்து நன்றாக கழுவி நீராவியில் வேக வைத்து பின்பு வானலியில் போட்டு மிளகு , சீரகம்  சேர்த்து பொறியலாக செய்து   அளவு அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். (முருங்கைக்காயையும் எடுத்துக் கொள்ளலாம்). 

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.