உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- நன்றாக தூக்கம் வர சீமை அமுக்கரா வேர் நன்கு இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். தினந்தோறும் (5கிராம்) வீதம் இரவில் உணவிற்குப் பிறகு பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும்.
- வயிற்று வலி , வயிற்றுப் புண் குணமாக அதிமதுரம் பொடி (100கிராம்) , சீமை அமுக்கரா பொடி (100 கிராம்) இவை இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு தினமும் 3 வேளை தலா 2 கிராம் வீதம் உணவிற்கு முன் அல்லது பின் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, வயிற்றுபுண் குணமாகும்.
- ஆண்மைக்குறைவு நீங்க பூனைகாலி விதை (100கிராம்) ,சீமை அமுக்குரா வேர் (100கிராம்) இவை இரண்டையும் இடித்து பொடியாக்கி ஒன்றாகக் கலந்து காலை , மாலை என இருவேளையும் (1ஸ்பூன்) வீதம் பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை பெருக்கம் உண்டாகும்.
- மூட்டு அழற்சி , பசியின்மை நீங்க அமுக்கரா கிழங்குப் பொடியை (2கிராம்) அளவுக்கு எடுத்து தேனில் குழைத்து காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம், பசியின்மை, மூட்டு அழற்சி, செரிமானக் குறைவு, இருமல், உடல் வீக்கம், முதுமைத் தளர்ச்சி ஆகியவை நீங்கும்.
- கை , கால் , இடுப்பு , மூட்டு , தொடை வலி குணமாக அமுக்கரா , சுக்கு , ஏலக்காய் , சித்தரத்தை இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்து அரைத்து வைத்துக்கொண்டு காலை , மாலை என இருவேளையும் தலா 2 கிராம் அளவுக்கு உணவிற்குப் பின் சாப்பிட்டு வத்தால் கை, கால் , மூட்டு , இடுப்பு ,தொடை வலி அனைத்தும் குணமாகும்.
- உடல் வலி , அலுப்பு , களைப்பு நீங்க அமுக்கரா பொடியை தினமும் 2ஸ்பூன் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து உணவிற்குப் பின் சாப்பிட்டு வந்தால் உடல் அலுப்பு, உடல்வலி, களைப்பு மாறும்.
- உடல் பருமனாக அமுக்கரா பொடி (2கிராம்) அளவு எடுத்து நெய்யில் கலந்து இருவேளையும் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் பருமனாகும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com