உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
உடல்நலத்தை கெடுக்கும் ஊறுகாய்:
- வயிற்றில் உப்புச உணர்வை உண்டாக்கும் ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிக அளவிலான உப்பு சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை தினந்தோறும் எடுத்து வரும் போது அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.
- நீரிழிவை உண்டாக்கும் ஊறுகாயில் பதப்படுத்தும் பொருளான சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும்.
- இதயநோய்ச் சார்ந்த பிரச்சனைகளை உண்டாகும் ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதயநோய்க்கு வழிவகுக்கும்.
- உயர் இரத்த அழுத்தம் உண்டாகும் ஊறுகாயில் அதிக அளவில் உப்பு இருப்பதால் இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். ஆகவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- அல்சர் உண்டாகும் ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர அல்சர் பிரச்சனையை சந்திக்கக் கூடும். எனவே சாதாரணமாக அதிக அளவில் காரம் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, ஊறுகாயை அதிகம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
- செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும் ஊறுகாயை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com