உணவே மருந்து

குழந்தைகளுக்கும், உடல் நலிவடைந்தவர்களுக்கும் உகந்த கஞ்சி

கோவை பாலா

சோளக் கஞ்சி

தேவையான பொருட்கள்

காரட் துருவியது -  அரை கப்
சோள விதை  அரைத்தது - அரை கப்
அரிசி - ஒரு கப்
தண்ணீர் - 2 லிட்டர்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்தப் பிறகு அதில் அரிசி மற்றும் சோளத்தை போடவும். நன்கு வெந்ததும்  அதனுடன் காரட் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள் : இந்தக் கஞ்சியை குழந்தைகளும்  , நீண்ட நாள் உடல் நலிவடைந்துள்ளவர்களும் காலை வேளை உணவாக  உண்ணுவதற்கு  உகந்த கஞ்சியாகவும்  உடலுக்குத் தேவையான ஆற்றலையும் கொடுக்கக் கூடிய உகந்த உணவு.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT