- அவரைக் காய்களை அன்றாட உணவில் பயன்படுத்தி வர நரம்புத்தளர்ச்சி, நரம்பக் கோளாறு போன்ற தொல்லைகளில் இருந்து குணம் பெறலாம். இதில் உள்ள வைட்டமின் சி உடலில் சோர்வு ஏற்படாமல் தடுத்து உடலைப் பாதுகாக்கும்.
- அவரைக்காயில் காணப்படும் நார்ப்பொருள் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும்.
- அவரைக்காய் வயிறு எரிச்சல் மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.
- சளி, இருமல் போன்றவற்றால் அவதிபடுபவர்களுக்கு அவரை சூப் நல்ல பலனைக் கொடுக்கும்.
- ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்கள் அடிக்கடி அவரைக்காய்களை பயன்படுத்தி வர, இதிலுள்ள லெசித்தின் எனும் நார்ப்பொருள் ரத்தத்தை சுத்தப்படுத்தி, ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை குறைப்பதோடு, ரத்தக் குழாய்களில் கொழுப்புப் பொருட்கள் அடைத்துக் கொள்வதையும் தடுத்து, மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது.
- தூக்கமின்மையால் அவதிபடுவோர்கள் இரவு உணவில் அவரைக் காய்களை பயன்படுத்தி வர சுகமான தூக்கம் கிடைக்கும்.
- நீரழிவு நோயினால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போதல் போன்றவை நீங்கும்.
- இன்சுலினை அதிக அளவில் சுரக்கச் செய்து சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
- வயதானவர்கள் அவரைக்காய்களை உணவில் அடிக்கடி பயன்படுத்தி வர தசைநார்கள் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி பெருகி முதுமையில் நோய்களின் தாக்கமும் குறையும்.
- நோய்க்கு மருந்து சாப்பிடும் காலத்திலும், விரதம் இருக்கும் காலத்திலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பலத்தை கொடுப்பதுடன், விரத காலத்தில் மனஅமைதியை அதிகரித்து சிந்தனையை தெளிவுப்படுத்தும்.
காய்கள், கனிகள், கீரைகள், தானியங்கள்' என்னும் நூலிலிருந்து