உணவே மருந்து

இதய நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கிய கஞ்சி

கோவை பாலா

தங்கச் சம்பா வெந்தயக் கஞ்சி
 
தேவையான பொருட்கள்

 
தங்கச் சம்பா அரிசி  - 100  கிராம்
வெந்தயம் - 10 கிராம்
மிளகு  - 5 கிராம்
திப்பிலி -  3
பெருங்காயம்  - 5 சிட்டிகை

செய்முறை

  • முதலில் தங்கச் சம்பா அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  • வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவை அனைத்தையும் ஒன்றாக்கி அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
  • ஊற வைத்துள்ள தங்கச்சம்பா அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • நன்கு கொதிக்கும் பொழுது அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கலக்கி கொதிக்க வைத்து கஞ்சியாக்கி இறக்கி வைத்து குடிக்கவும்.

பயன்கள்

இந்தக் கஞ்சியில் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் இருதய நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. வாரம் இரண்டு நாட்களாவது எடுத்துக் கொள்ளவும்.

படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  : 96557 58609,  73737 10080
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT