நோய்களை விரட்டி உடலை திடகாத்திரமாக வைக்க உதவும் கஞ்சி
வெண்பூசணிக் காயை தோல் விதையோடு நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கி வைத்துக் கொள்ளவும்.
வெண்பூசணி வரகுக் கஞ்சி
தேவையான பொருட்கள்
வரகு - 100 கிராம்
வெண் பூசணிக்காய் - 100 கிராம்
பூண்டு - 10 பல்
சுக்கு - ஒரு துண்டு
சீரகம் - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
பசும் பால் - 100 மி.லி
செய்முறை
- வெண்பூசணிக் காயை தோல் விதையோடு நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கி வைத்துக் கொள்ளவும்.
- வரகு அரிசியை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு 200 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
- வரகு அரிசி பாதி வெந்த நிலையில் இருக்கும் போது அதில் பூண்டு, ஒரு துண்டு சுக்கு, சீரகம், வெந்தயம், பசும் பால் மற்றும் அரைத்து ஜூஸாக்கி வைத்துள்ள வெண்பூசணிக் காயைச் சேர்த்து வேக விடவும்.
- நன்கு வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி இறக்கி வைக்கவும்.
- இதனோடு கறிவேப்பிலை புளித் துவையல் செய்து சாப்பிட்டால் சுவை கூடும்.
பயன்கள்
Advertisement
இந்தக் கஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வரும் நோய்களை விரட்டி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் அற்புதக் கஞ்சி.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com