உணவே மருந்து

நோய்களை விரட்டி உடலை திடகாத்திரமாக வைக்க உதவும் கஞ்சி

கோவை பாலா


 
வெண்பூசணி வரகுக் கஞ்சி
 
தேவையான பொருட்கள்

 
வரகு - 100 கிராம்
வெண் பூசணிக்காய் - 100 கிராம்
பூண்டு - 10  பல்
சுக்கு - ஒரு துண்டு
சீரகம் - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
பசும் பால் - 100 மி.லி

செய்முறை

  • வெண்பூசணிக் காயை தோல் விதையோடு நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வரகு அரிசியை சுத்தம் செய்து  ஒரு பாத்திரத்தில் போட்டு 200 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  • வரகு அரிசி பாதி வெந்த நிலையில் இருக்கும் போது  அதில் பூண்டு, ஒரு துண்டு சுக்கு, சீரகம், வெந்தயம், பசும் பால் மற்றும் அரைத்து ஜூஸாக்கி வைத்துள்ள வெண்பூசணிக் காயைச் சேர்த்து  வேக விடவும்.
  • நன்கு வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி இறக்கி வைக்கவும்.
  • இதனோடு கறிவேப்பிலை புளித் துவையல் செய்து சாப்பிட்டால்  சுவை கூடும்.

பயன்கள்

இந்தக் கஞ்சியை  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்  வரும் நோய்களை விரட்டி உடலை ஆரோக்கியமாக  வைக்க உதவும் அற்புதக் கஞ்சி.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT