அரசாணிக்காய் சிறுதானியக் கஞ்சி
அரசாணிக்காய் - 100 கிராம்
குதிரை வாலி - 50 கிராம்
வரகு - 50 கிராம்
சாமை - 50 கிராம்
பாசிப் பருப்பு - 50 கிராம்
தேங்காய்ப் பால் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு பல் - 4
சீரகம் - அரைத் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
- முதலில் அரசாணிக்காயை தோலோடு நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும்.
- சிறுதானியங்கள் அனைத்தையும் கழுவி, சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
- பிறகு தானியங்கள் ஊறிய தண்ணீரோடு அப்படியே அடுப்பில் வைத்து அதனோடு பாசிப்பருப்பு சேர்த்து வேக விடவும். கொஞ்சம் வெந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள அரசாணிக்காய் ஜூஸை சேர்த்து கஞ்சி பதம் வரும் வரை வேகவிடவும்.
- பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, வேகவைத்த கலவையை ஊற்றிக் கொதிக்க விடவும்.
- பிறகு, தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும். தேவையான அளவு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பின்பு பரிமாறவும்.
- சத்துக்கள் நிறைந்த இந்தக் கஞ்சியை ஒரு வேளை உணவாக உட்கொள்ளலாம்.
- பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய அற்புதமான ஆரோக்கியக் கஞ்சி
- தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com