உணவே மருந்து

சளி, இருமல், இரைப்பு, மூச்சுத் திணறல் போன்ற சுவாசம் சார்ந்த அனைத்து பிரச்னைகளும் தீரும்

இந்தத் தைலத்தை தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு டீஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வரவும்

கோவை பாலா

கீரை : மணத்தக்காளிக் கீரை 

தேவையான பொருட்கள்

மணத்தக்காளிக் கீரைச் சாறு - அரை லிட்டர்
சுக்கு - 10 கிராம்
மிளகு - 10 கிராம்
திப்பிலி - 10 கிராம்
சித்தரத்தை - 10 கிராம்
அதிமதுரம் - 10 கிராம்
ஆடாதொடை - 10 கிராம்
பசும் பால் - அரை லிட்டர்
நல்லெண்ணெய் - 1 லிட்டர்

செய்முறை

  • சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், ஆடாதொடை இவை அனைத்தையும் தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • தூள் செய்த பொருட்களை பசுமபாலுடன் சேர்த்து கஷாயமாக்கி (பாதியளவு) வடிகட்டிக் கொள்ளவும்.
  • கஷாயமாக்கிய பாலுடன் மணத்தக்காளிக் கீரை சாற்றை கலந்து கொதிக்க வைத்து பாதியளவு சுண்டச் செய்து அதனுடன் நல்லெண்ணெய்யை சேர்த்து காய்ச்சி தைல  பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும்.

சாப்பிடும் முறை : இந்தத் தைலத்தை தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு டீஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வரவும் (வெறும் வயிற்றில்)

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT