உணவே மருந்து

கடும் இருமலைக் குணப்படுத்த உதவும் கசாயம்

கோவை பாலா

முளைக் கீரை அதிமதுரம் கசாயம்

தேவையான பொருட்கள்

முளைக் கீரை.           -   ஒரு கைப்பிடி

அதிமதுரம்.                 -    ஒரு துண்டு

மஞ்சள்.                       -   3 சிட்டிகை
 

செய்முறை

  • முதலில் முளைக் கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் 400 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் அதிமதுரம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • நீர் நன்கு கொதித்து பாதியாக சுண்ட வைத்து அதனை வடிகடடி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த கசாயம் நாட்பட்ட இருமல் , தொடர் இருமல் , கக்குவான்  இருமல் மற்றும் சளியுடன் கூடிய இருமல் உள்ளவர்கள் அனைவரும் இந்த கசாயத்தை தயார் செய்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வருவதன் மூலம் அனைத்து இருமல்களிலிருந்து விடுபடமுடியும்.

படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

SCROLL FOR NEXT