உணவே மருந்து

கண் புகைச்சல், கண் காசம், கண் படலம் ஆகியவற்றை குணமாக்க உதவும் கசாயம்

முதலில் கீரையை  கழுவி ஆய்ந்து  வைத்துக் கொள்ளவும்.

கோவை பாலா

 
சிறு கீரை மிளகு கசாயம்

தேவையான பொருட்கள்

சிறு கீரை.          -   ஒரு கட்டு

மிளகு.                -   10

வெங்காயம்.     -   5

பூண்டு.               -   5 பல்

மஞ்சள் தூள்     -  சிறிதளவு


செய்முறை

  • முதலில் கீரையை  கழுவி ஆய்ந்து  வைத்துக் கொள்ளவும்.
  • பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள கீரை , தட்டி வைத்துள்ள மிளகு , பூண்டு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • நன்கு கொதித்து அதனை பாதியாகச் சுண்ட வைத்து  இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

பலன்கள்

  • கண் புகைச்சல், கண் காசம் மற்றும் கண் படலம் ஆகிய குறைபாடு உள்ளவர்களுக்கு அரு மருந்தாக உதவும் கசாயம்.
  • இதனை தினமும் காலை மாலை என இருவேளையும் குடித்து  வந்தால் நல்ல பலன் கிட்டும். 

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT