உணவே மருந்து

கண் புகைச்சல், கண் காசம், கண் படலம் ஆகியவற்றை குணமாக்க உதவும் கசாயம்

கோவை பாலா

 
சிறு கீரை மிளகு கசாயம்

தேவையான பொருட்கள்

சிறு கீரை.          -   ஒரு கட்டு

மிளகு.                -   10

வெங்காயம்.     -   5

பூண்டு.               -   5 பல்

மஞ்சள் தூள்     -  சிறிதளவு


செய்முறை

  • முதலில் கீரையை  கழுவி ஆய்ந்து  வைத்துக் கொள்ளவும்.
  • பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள கீரை , தட்டி வைத்துள்ள மிளகு , பூண்டு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • நன்கு கொதித்து அதனை பாதியாகச் சுண்ட வைத்து  இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

பலன்கள்

  • கண் புகைச்சல், கண் காசம் மற்றும் கண் படலம் ஆகிய குறைபாடு உள்ளவர்களுக்கு அரு மருந்தாக உதவும் கசாயம்.
  • இதனை தினமும் காலை மாலை என இருவேளையும் குடித்து  வந்தால் நல்ல பலன் கிட்டும். 

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT