உணவே மருந்து

நீர்க்கட்டு உடைந்து சிறுநீரைத் தாராளமாக  வெளியேற்ற உதவும் கஷாயம்

முதலில் முருங்கைக் கீரையைச் சுத்தப்படுத்தி ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளவும்.

கோவை பாலா


 
முருங்கைக் கீரை பார்லி கஷாயம்
 
தேவையான பொருட்கள்

 
முருங்கைக் கீரை      -  ஒரு கைப்பிடி

பார்லி                          -   20  கிராம்

சீரகம்                           -    கால் ஸ்பூன்

மஞ்சள் தூள்             -   சிறிதளவு

செய்முறை

  • முதலில் முருங்கைக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் பார்லியைப் போட்டு  வேகவைக்கவும்.
  • பார்லி நன்கு வெந்தவுடன் அதில் முருங்கைக் கீரை, சீரகம் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து  நன்கு வேக வைக்கவும்.
  • நன்கு வெந்தவுடன் அதனை வடிகட்டி வைத்து பருகவும்.

பயன்கள்

  • இந்த முருங்கைக் கீரை பார்லி கஷாயம்  நீர்க்கட்டுப் பிரச்னையைத் தீர்க்க உதவும் அருமருந்தாகச் செயல்படும்.
  • இதனைத் தொடர்ந்து குடித்து வந்தால் நீர்க்கட்டு உடைந்து சிறுநீர் பிரிந்து தாராளமாகவும்  சீராகவும் வெளியேற்ற உதவும்.

வெற்றிலை (2), மிளகு (2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் இரவு படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்துக் காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT