முகப்பு
இந்தியா

கனடாவில் காணாமல் போன பஞ்சாப் பாடகர்

இசை நிகழ்ச்சிக்காக கனடா சென்ற பஞ்சாபை சேர்ந்த இளம் பாடகரை காணவில்லை என அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Updated On : 17 டிசம்பர், 2015 at 8:44 PM
பகிர்:

இசை நிகழ்ச்சிக்காக கனடா சென்ற பஞ்சாபை சேர்ந்த இளம் பாடகரை காணவில்லை என அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த லெகம்பர் சிங் (30) என்ற பாடகர் கனடா நாட்டின் ரோடரண்டோ நகருக்கு சென்றார். இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு இந்தியா திரும்ப வேண்டிய அவர் திடீரென்று காணாமல் போய்விட்டார்.

அவரை கடந்த நவம்பர் 5 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மிஸிசுவாகா நகரின் டெர்ரி சாலைப் பகுதியில் பார்த்ததாக உறவினர் ஒருவர் கூறியதாக போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கனடாவில் உள்ள ஏதாவது ஒரு அமைப்பு அழைக்கும் விடுக்கும்பட்சத்தில் இந்தியாவிலிருக்கும் இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், மதப் பிரசாரகர்களுக்கு எளிதாக விசா வழங்கப்படுகிறது. அங்கு செல்பவர்களில் , இந்தியா திரும்ப விரும்பாத பலர் அங்கேயே மறைந்துவிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.