போலீஸாரின் கற்பனை ஃபேஸ்புக் பக்கத்தால் மாட்டிக் கொண்ட முன்னாள் விமானப்படை அதிகாரி
போலீஸார், வெளிநாட்டு பெண் பத்திரிக்கையாளர் பெயரில் உருவாக்கியகற்பனையான முகநூல் பக்கம் மூலம் ரஞ்சித் ரகசியங்களை பகிர்ந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்ததாக விமானப்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி ரஞ்சித் இன்று கைது செய்யப்பட்டார்.
போலீஸார், வெளிநாட்டு பெண் பத்திரிக்கையாளர் பெயரில் உருவாக்கியகற்பனையான முகநூல் பக்கம் மூலம் ரஞ்சித் ரகசியங்களை பகிர்ந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.
கேரள மாநிலம், மலப்பபுரத்தைச் சேர்ந்தவர் கே.கே.ரஞ்சித். கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்த அவர் அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
Advertisement
பணிநீக்கத்துக்குப் பிறகு அவரது நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டது.
இந்நிலையில் தில்லி போலீஸாரின் குற்றப் பிரிவு, ராணுவ ரகசிய பிரிவு, விமானப்படையின் ஒருங்கிணைப்புப் பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய கூட்டு விசாரணையில் ரஞ்சித் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு கடத்தியது தெரியவந்தது.
அவரை கைது செய்வதற்கும், ரகசியங்களை பெறுவதற்கும் போலீஸார் ரகசிய திட்டத்தைச் செயல்படுத்தினர்.
அதன்படி, அமெரிக்காவிலிருந்து செயல்படும் ஊடகத்தில் பணியாற்றுவதாக டாமினி மெக்னட் என்ற பெண் பத்திரிக்கையாளர் பெயரில் கற்பனையான ஒரு முகநூல் (ஃபேஸ்புக்)பக்கத்தை உருவாக்கினர்.
அந்த பக்கத்தின் மூலம் ரஞ்சித்தை தொடர்பு கொண்ட போலீஸார், ஒரு கட்டுரைக்காக விமானப்படை குறித்த தகல்கள் தேவைப்படுவதாகவும், அதற்கு பணம் தருவதாகவும் கூறினர்.
இதில் மயங்கிய ரஞ்சித், ராணுவ ரகசியங்கள் குறித்த தகவல்களை இ-மெயில் மூலம் அந்த கற்பனையான பெண் பத்திரிக்கையாளருக்கு அனுப்பிவைத்துள்ளார். இதற்கு பலனாக ரஞ்சின் வங்கி கணக்கில் போலீஸார் பணம் செலுத்தினர்.
ரஞ்சித், விமானப்படையின் பயிற்சிகள் குறித்த தகவல்கள், படையின் நகர்வுகள் குறித்த தகவல்கள், பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள படையினர் குறித்த தகவல்களை அளித்தார்.
இதையடுத்து இந்திய ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக தில்லி கூடுதல் ஆணையர் (குற்றம்) அலோக் குமார் கூறினார்.
போலீஸாரின் இந்த ரகசிய நடவடிக்கையால் இதுவரை ஐஎஸ்ஐ அமைப்புக்கு தகவல் அளித்ததாக பணியிலிருக்கும் ராணுவ அதிகாரி, பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.