மதுரையில் ஏன் கருப்பு இசை வெளியீட்டு விழா?
கருப்பு இசை வெளியீட்டு விழா குறித்து...
கருப்பு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மதுரையில் நடைபெறவுள்ளது.
இயக்குநர் ஆர்ஜே பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மே. 14 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “கருப்பு”. இப்படத்தின் 3 பாடல்கள் கவனம் ஈர்த்துள்ளதால் சூர்யாவின் பக்கா கமர்சியல் படமாக இது இருக்கும் என அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும், கருப்பு திரைப்படம் படையப்பா, கில்லி போல் இருக்குமென இயக்குநர் ஆர்ஜே பாலாஜி கூறியிருந்தது எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஏப். 26 ஆம் தேதி மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
வழக்கமாக சென்னையில் நடைபெறும் இசை வெளியீட்டு விழா இம்முறை மதுரையில் நடைபெறுவது ஏன் என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், இப்படம் முழுக்கவே கருப்புசாமியை மையப்படுத்தி இருப்பதே மதுரையில் விழாவை நிகழ்த்த காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கருப்புசாமியை பிரதிபலிக்கும் விதமாக சூர்யா சுருட்டு பிடிக்கும் காட்சிகளும் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.