இந்தியா

உச்ச நீதிமன்ற தீர்ப்பு கேரள அரசின் கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரம்: உம்மன் சாண்டி

புதிய மதுக்கொள்கையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது, அரசின் கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரம் என முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.

PTI

கேரள அரசின் புதிய மதுக்கொள்கையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது, அரசின் கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரம் என முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.

திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேரள அரசின் புதிய மதுக் கொள்கை என்பது நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவாகும். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது அரசின் கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

கேரளத்தின் பிரதான எதிர்க்கட்சியான மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணி, மதுக்கொள்கை குறித்த தங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும்.

அடுத்த 10 ஆண்டுக்குள் கேரளத்தில் முழு மதுவிலக்கை கொண்டு வரும் வகையில், புதிய மதுக் கொள்கையை காங்கிரஸ் அரசு அறிவித்தது.

இதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் மதுக் கடைகளை மூடுவது, 5 நட்சத்திர ஹோட்டல் அந்தஸ்துக்கு கீழ் உள்ள ஹோட்டல்களுடன் இணைந்துள்ள 700 மது பார்கள் மூடுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதை எதிர்த்து, மதுபானகூட உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT