இந்தியா

ஐஐடி கான்பூர்: தோல்வி அடைந்த 12க்கும் அதிகமான மாணவர்கள் நீக்கம்

தங்களது பிரிவுகளில் சரியாக படிக்காமல் தோல்வியடைந்த 12க்கும் அதிகமான மாணவர்கள் கான்பூர் ஐஐடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

PTI

தங்களது பிரிவுகளில் சரியாக படிக்காமல் தோல்வியடைந்த 12க்கும் அதிகமான மாணவர்கள் கான்பூர் ஐஐடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்கள் நிறுவனம் அமைத்துள்ள குழுவினரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அதன் இயக்குநர் இந்திராணி மானா கூறியுள்ளார்.

ஐஐடி கான்பூர் நிறுவனத்தில் பயிலும் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தங்களது பிரிவுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தோல்வியடைந்தனர். இதையடுத்து அவர்களை நிறுவனத்திலிருந்து நீக்கம் செய்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

தோல்வியடைந்த மாணவர்கள் நிறுவனம் அமைத்துள்ள குழுவில் மேல்முறையீடு செய்யலாம். அவர்களது மனுவை ஆட்சிக் குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என துணை பதிவாளர் ஏ.கே.மிஸ்ரா கூறினார்.

தோல்வியடைந்த மாணவர்கள் நிறுவனத்தை விட்டு நீக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். இது அனைத்து ஐஐடிகளிலும் ஆண்டுதோறும் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும், இச்செய்தியை ஊடகங்கள் பெரிதுபடுத்துவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT