நடுவானில் விமான ஊழியர் மீது தாக்குதல்: கனடா-இந்தியர் கைது
கனடாவின் டொரண்டோ நகரில் இருந்து புது தில்லிக்கு புறப்பட்ட விமானத்தில், நடுவானில் விமான ஊழியர் ஒருவரை கனடா-இந்தியர் ஒருவர் தாக்கினார்.
கனடாவின் டொரண்டோ நகரில் இருந்து புது தில்லிக்கு புறப்பட்ட விமானத்தில், நடுவானில் விமான ஊழியர் ஒருவரை கனடா-இந்தியர் ஒருவர் தாக்கினார். இதையடுத்து விமானம் மீண்டும் டொரண்டோ நகருக்கு திருப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
ஏர் கனடா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று கனடா நாட்டின் டொரண்டோ நகரிலிருந்து புது தில்லிக்கு புறப்பட்டது.
விமானம் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் பயணம் செய்த கனடா-இந்தியர் ஜாஸ்கரன் சித்து (47), விமானப் பணிப் பெண் ஒருவரை தாக்கியதாகத் தெரிகிறது.
Advertisement
இதையடுத்து விமானம் உடனடியாக மீண்டும் டொரண்டோ நகருக்கு திருப்பட்டது. அங்கு போலீஸார் சித்துவை கைது செய்தனர். உடல்ரீதியாக தாக்குதல், விமானப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சித்துவால் தாக்கப்பட்ட அந்த பணிப்பெண்ணுக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது.