இந்தியா

பிரசவத்தின் போது குழந்தையின் தலையை தனியாக எடுத்த சம்பவம்: மருத்துவர், செவிலியர் கைது

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தையின் தலையை தனியாக எடுத்து குப்பைத் தொட்டியில் போட்ட சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் மற்றும் செவிலியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

PTI

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தையின் தலையை தனியாக எடுத்து குப்பைத் தொட்டியில் போட்ட சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் மற்றும் செவிலியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மருத்துவர் தையபா இக்பால் மற்றும் செவிலியர் மாதுரி மீது அரசியலப்புச் சட்டம் 304, 315 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 15-ம் தேதி, 32 வயது நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அன்று மாலை அவருக்கு மருத்துவரும், சில நர்சுகளும் பிரசவம் பார்த்து உள்ளனர். அப்போது அவர்கள் குழந்தையை பலமாக இழுத்தாக கூறப்படுகிறது. இதனால் அந்த குழந்தையின் தலை மட்டும் தனியாக வந்துள்ளது.

இதையடுத்து, பதறி போன அவர்கள் குழந்தையின் தலையையும், சிதைந்த உடல் பாகங்களையும் அங்குள்ள குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய உறவினர்களும் பிறந்த குழந்தையை கேட்ட போது பிரசவம் பார்த்த மருத்துவரும், நர்சுகளும் சேர்ந்து குழந்தையின் தலையை தனியாக எடுத்ததும், பின்னர் அதனுடன் உடலின் மற்ற பாகங்களையும் குப்பைத் தொட்டியில் வீசியதும் அவர்களுக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்ட கலெக்டர் ராகேஷ்குமார் சிங் அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT