இந்தியா

350 கி.மீ. தூரம் வரை தாக்கும் பிரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்ட்ட பிரித்வி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

IANS

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்ட்ட பிரித்வி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ஒடிஸா மாநிலத்தின், பலாசூர் மாவட்டத்தின், சந்திப்பூரில் உள்ள சோதனை மையத்தில் இச்சோதனை நடைபெற்றது.

சுமார் 350 கி.மீ. தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தும் இந்த ஏவுகணை, 500 முதல் 1000 கிலோ வரை வெடிமருந்துகளை சுமந்து செல்லும் வலிமையுடையது.

கடந்த 2003 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்ட பிரித்வி-2 ஏவுகணை, திட மற்றும் திரவ எரிபொருளால் இயங்கக்கூடியது. மேலும், அணு மற்றும் வழக்கமான ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது.

சோதனையின் போது பிரித்வி-2 ஏவுகணையின் செயல்பாடுகள், ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் ராடார்கள், ராடார்கள், மின் ஆப்டிகல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தொலைத் தொடர்பு நிலையங்களால் கண்காணிக்கப்பட்டது என டி.ஆர்.டி.ஓ. அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT